2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்துவைப்பு

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வெவ புதிய பொலிஸ் நிலையம் என்பன நாளை சனிக்கிழமை(15) திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈச்சங்குளம் புதிய பொலிஸ் நிலையம் நாளை காலை 8.30 மணிக்கும் போகஸ்வெவ புதிய பொலிஸ் நிலையம் முற்பகல் 11 மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் திறந்துவைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .