2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரச்சினைகள் குறித்து ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துரைப்பு

Niroshini   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் வாழும் மலையக மக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் இஸாக் நாடியா ரீட்டாவை, கண்டியிலுள்ள சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் வைத்து, சனிக்கிழமை (15) சந்தித்துக் கலந்துரையாடினர்.  

இதன்போது, வடக்கு - கிழக்கில் சிறுபான்மையாக வாழ்கின்ற மலையக மக்கள், அரசியல், அபிவிருத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,பாரபட்சம் தொடர்பில், ரீட்டாவிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.  

1958, 1977, 1983ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து, வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு சென்று வாழ்ந்து வரும் மலையக மக்கள், தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளனர்.  

இதேவேளை, தெல்தோட்டை லிட்டில்வெலி தோட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு, தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் ரீட்டா, கேட்டறிந்து  கொண்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .