2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலிஸ் நியமனம், பதிவியுயர்வு இடமாற்றத்துக்கு புதிய கொள்கை

Princiya Dixci   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நியமனம், பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

அரசியல் தலையீடு காரணமாக ஒரு நிரந்தரக் கொள்கையைக் கடந்த காலங்களில் அமுலாக்க முடியாது போனது. இதனால்தான் ஒரு புதிய கொள்ளை தேவையாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இது, பொலிஸ் சேவையில் இணைய விரும்புவோரும் பதவி உயர்வை நாடுவோருக்கும் இருக்க வேண்டிய தகைமைகளை தெளிவுபடுத்தும். 

வர்த்தமானிப்படுத்தப்பட்ட, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் நியமனம், பதவியுயர்வு தொடர்பான புதிய நடைமுறை ஒன்று உருவாகும். 

பொலிஸ் திணைக்களம், கான்ஸ்டபிள், உப - இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்கர் என தரத்தில் பொலிஸார் நியமிக்கும். 

உப - இன்ஸ்பெக்டர்களுக்கு க.பொ.த உயர் தரமும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பல்கலைக்கழகப் பட்டமும் அவசியமாகும். 

உப - இன்ஸ்பெக்டர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய நியமன முறைமை, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஏனையப் பதவி நியமன முறைகள் ஆக்கப்பட்டு வருகின்றன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்தின் பின்னர் இந்த செயன்முறைகள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X