2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘மகனின் விடுதலையை வேண்டி வழிபாடுகளில் ஈடுபடும் தாயார்’

Editorial   / 2019 மே 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பளித்து அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (22) ​மாலை கையொப்பமிட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்காக அவரது தாயார், கொழும்புக்கு வருகைதந்து அவரது விடுதலைக்காக, விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கலகொட பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு வருகைதந்த ஞானசார தேரரின் தாயர், கொழும்பிலுள்ள பிக்குகளுடன் இணைந்து விசேட பூஜை வழிபாடுகளில் தற்பொழுது ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .