2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சை; திருகோணமலைக்கு முதலிடம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும், மாணிக்கம் சிவ தீபன்ராஜ் மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதி சித்தியடைந்துள்ளார்.

மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

திருகோணமலை - இறக்கக்கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நிலாவெளி கைலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும்,  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்  வைத்தியத் துறையில் கல்வி பயின்று வந்தார். 

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் 30 பேர் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .