2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னின்றவர்’

Editorial   / 2020 செப்டெம்பர் 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் தமக்கும் பாரிய இழப்பு எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாஸ, எந்தவொரு நேரத்திலும், மக்களின் பிரச்சினைக்காக முன்னிலையாகி அப்பிரச்சினைகளுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு தொண்டமான் நடவடிக்கை எடுத்திருந்தார் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 

“அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது தந்தையோடு நல்லுறவைப் பேணினார். இதனால் அப்போதிருந்த அரசாங்கத்தால் பிரஜாவுரிமை இழக்கப்பட்ட ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மீண்டும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு முடிந்தது. 

“எந்தவொரு நேரத்திலும், மக்களின் பிரச்சினைக்காக முன்னிலையாகி அப்பிரச்சினைகளுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அவரது திடீர் இழப்பு, அவர் பிரிதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .