2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘மக்கள் தலைவர் வேண்டுமா கொலையாளி வேண்டுமா’?

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

நாட்டுக்கு மக்களை பாதுகாப்பவர் வேண்டுமா அல்லது மனித கொலையாளி ஒருவர் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், எதிரணியினர் மறைத்த தலைவர் ரணசிங்க பிரேமதாஸ மீது சேறு பூச ஆரம்பித்துள்ளதாகவும் அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தான் நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

மறைந்த தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் வெற்றிக்காகவும் ரணசிங்க பிரேமதாஸ  உதவியதாக தெரிவித்த அவர், பிரேமதாஸவாலேயே தொழிற்சாலைகள் கிராமங்கள் வரை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் அவரது காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தபோது மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை பெற்றுக்கொடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X