Kanagaraj / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் வைத்தே மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை இடம்பெறும் என, அக்குழு தெரிவித்துள்ளது.
காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், 0112437676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 0112328780 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யமுடியும் என தெரிவித்துள்ள அக்குழு, constitutionalreforms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் கருத்துக்களை அனுப்பமுடியும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகளை கடிதங்கள் மூலம் அனுப்புவதாயின், தலைவர், அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான குழு, ஸ்டேபிள் வீதி, கொழும்பு-02 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்களை, சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவிக்க முடியும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் தொடர்பில், அலரிமாளிகையில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
10 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
18 minute ago