2025 ஜூன் 28, சனிக்கிழமை

மட்டக்களப்பில் கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் உயிரிழப்பு; மூவர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு, கரடியனாறு , கித்துள் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில்  13 வயதான  சிறுவன் உயிரிழந்துள்ளார்.

4 பேரடங்கிய குழுவொன்று நேற்று மாலை, வேட்டையாடுவதற்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துவக்கு தவறுதலாக இயங்கியதில் சிறுவன் காயமடைந்துள்ளார்.

கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வேட்டையாடுவதற்கு சென்ற  22, 20, 14 , வயதுடைய மூவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .