2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Freelancer   / 2025 ஜூன் 28 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் இஸ்ரேலுக்கு செல்லும் எதிர்பார்ப்புடன் மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தோரின் மறு நுழைவு விசா செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாகவே இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இஸ்ரேலில் இருந்து மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள், மறு நுழைவு விசா காலாவதியான பின்னரும் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .