2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மதில் இடிந்து விழுந்ததில் ஊழியர் படுகாயம்

Janu   / 2026 ஜனவரி 18 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், மதில் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

சனிக்கிழமை (17) மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்துள்ளதுடன் அதில் தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் 

நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ரீ.எல்.ஜவ்பர்கான்  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X