2025 ஜூன் 18, புதன்கிழமை

மதிலேறி தப்பிய மூவருள் ஒரு கைதி சிக்கினார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 துஷிதகுமார சில்வா

களுத்துறை- ஜாவத்த சிறைச்சாலையின் மதிலேறி இன்று (2) அதிகாலை  தப்பிச் சென்ற 3 கைதிகளுள் ஒருவர்  சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, களுத்துறை- வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட கைதி களுத்துறை- வடக்கு கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று  (2) அதிகாலை  பெய்த கடும் மழைக்கு மத்தியில், தப்பிச் சென்ற 3 கைதிகளும் போதைப் ​பொருள் தொடர்பில் குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் 24, 32 மற்றும் 23 வயதுடையவர்கள் என்றும், இவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் பொலிஸார் ஆரம்பித்துள்ளனரென்றும்  உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .