2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதி

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், அனுமதிபெற்ற மதுபான நிலையங்களை திறப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுவரித் திணைக்களத்தினால் இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்ட நடைமுறை, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்படி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு அமைய, செயற்படத் தவறும் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X