2025 ஜூன் 18, புதன்கிழமை

மதுபோதையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் பணிநீக்கம் செய்யப்பட்டார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் ​தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் மத்திய நிலையமாகப் பெயரிடப்பட்டுள்ள வெயாங்கொட- பத்தலகெதர தேசிய கல்வியத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரியொருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட, வெயாங்கொட பொலிஸ் நிலைய பரிசோதகர் ஒருவரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, கம்பஹா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வைத்திய பரிசோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்தே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

* 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .