2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மதுஸுடன் கைதுசெய்யப்பட்ட பலருக்கு டுபாயில் வதிவிட விசா

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாக்கந்துர மதுஸுடன் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட பலரிடம் டுபாயில் காணப்படும் சொத்துக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இவர்களுக்கு டுபாயில் வசிப்பதற்கான விசாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கஞ்சிபானி இம்ரானுக்கு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து டுபாயில் வசிப்பதற்கான விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுஷ்க கௌசல் எனப்படும் ஜங்காவுக்கு இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியிலிருந்தும் ரொட்டும்ப அமிலவுக்கு  2017ஆம் ஆண்டு ஒக்​டோபர் மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னரும் டுபாயில் வசிப்பதற்கான விசா வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எந்தவொரு நபரும் டுபாயில் வசிப்பதற்கான விசா பெற வேண்டுமாயின் அவர்களுக்கு டுபாயில் சொந்த வீடு இருப்பதுடன், அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற நிலையில், குறித்த சந்தேகநபர்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் பெறும் பணத்தை டுபாயில் முதலீடு செய்திருக்கலாம் என்றும், இதன்மூலமே இவர்களுக்கன விசா வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .