Editorial / 2026 மார்ச் 01 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் உள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும்:
· நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் ஏற்பாடு செய்யும் நாட்டின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்கவும்.
· அத்தியாவசியமற்ற பயணம் மற்றும் பாரியளவிலான பொதுக் கூட்டங்களைத் தவிர்க்கவும்.
· அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்.
· எல்லா நேரங்களிலும் கைப்பேசிகளை முழுமையாக வலுவூட்டி வைத்திருக்கவும்; செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.
தேவைப்படும் இடங்களில் உதவி வழங்க பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசர முழுநேர சேவை தொடர்பிலக்கங்களை செயற்பாட்டில் ஈடுத்தியுள்ளன.
இலங்கையில் உள்ள குடும்பங்கள் தங்கள் உறவுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பின்வரும் பிரத்தியேக 24 மணி நேர அவசர தொடர்பு எண்களும் நிறுவப்பட்டுள்ளன:
· கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546
· இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822
· முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989
அமைச்சு தொடர்ந்து நிலையமையைக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலதிக இற்றைப்படுத்தல்களை வெளியிடும்.
8 minute ago
32 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
38 minute ago
44 minute ago