2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரத் தாகுதலுக்கு இலக்கான பணியாளர்

Freelancer   / 2025 ஜூலை 02 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்குப் பழுது பார்த்துக்கொண்டிருந்த நல்லூர் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் நல்லூர் பிரதேச சபையின் ஊழியர் ஒருவர் வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த நபருக்கு முழங்கை மற்றும் தொடைப்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .