2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மின்சார திருத்த சட்டமூலம்: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

Editorial   / 2025 ஜூன் 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என பிரதிசபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (30) அறிவித்தார்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதை எளிய பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க முடியும் என்று நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்றும் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிக்கும்  போதே, மேற்கண்ட வியாக்கியானத்தை அறிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X