2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை CID யிடம் ஒப்படைப்பு

Freelancer   / 2025 ஜூலை 21 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய அகழ்வின் போது, மேலும் 7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. 

ஏற்கனவே இந்த பகுதியிலிருந்து 65 என்புக்கூட்டுத் தொகுதிகள், இதுவரை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .