Editorial / 2025 நவம்பர் 17 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் பொருட்களை நிறைய இழந்துள்ளார். இதற்கிடையே, தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில், தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். அப்போது துரதிஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்றுப்போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று வெற்றி பெற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை ஈவு, இரக்கமின்றி கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.
அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து பொலிஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பொலிஸ் அப்பெண் கூறியதாவது;
”எனக்கு திருமணம் நடந்தது முதல், வரதட்சணைக்காக நான் சித்திரவதை செய்யப்பட்டேன். என் கணவர் சூதாட்டத்திற்கு அடிமையானதால், அவர் என்னை பணயத்தில் வைத்தார். அதன் பிறகு எட்டு பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். என் மாமனார் என்னை பாலியல் வன்கொடுமை செய்து, நான் வரதட்சணை கொண்டு வராததால், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். என் கர்ப்பம் கலைக்கப்பட்டது. என்னைக் கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் தள்ளிவிட்டனர். அவ்வழியாக சென்றவர்கள் என்னைக் காப்பாற்றினர். இப்போது வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று என்னை அச்சுறுத்துகின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago