Editorial / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பட்
துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனஜ மன்னார் காவல் நிலையம் அறிவித்துள்ளது.
மன்னார் காவல் பிரிவில் உள்ள மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் காவல் நிலையம் விசாரணைகளை தொடங்கியது.
அதன்படி, கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மன்னார் காவல் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும், 28.12.2025 அன்று காலை தலைமன்னார் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட முக்கிய சந்தேக நபரையும், ஒரு கைக்குண்டுடன், அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த ஒரு சந்தேக நபரையும் கைது செய்து முருங்கன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். மன்னார் காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
52 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
01 May 2026