Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், களபூமி காரைநகர் பகுதியில் மயங்கி விழுந்த மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுசிலா (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.
நேற்று (19) நண்பகல் கோவிலுக்கு புறப்பட ஆயத்தமான போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பிற்பகல் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை ஊர்காவல்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
1 hours ago