2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி

Editorial   / 2026 ஜனவரி 02 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வியாழக்கிழமை (01) அன்று கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம்   மாலை  5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றா  அவர்களுடைய கணவர் என்றும்,   நபர் ஒருவர் மது போதையில் கொலையுண்ட நபரது வீட்டுக்கு முன்னால் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகவும் அறியமுடிகின்றது.  

இந்நிலையில் குறித்த கொலையுண்ட நபர் மது போதையில் கூச்சலிட்டவர்  வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி மருதங்கேணி பகுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது  வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X