2025 ஜூன் 25, புதன்கிழமை

மறுத்தார் அமைச்சர் ஹலீம்

Editorial   / 2019 மே 26 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேர்த்தமைத் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும்​ பெண்நோயியல் வைத்தியர் செய்கு ஷியாப்தீன் மொஹமட் ஷாபியை விசாரணையின் பின்னர் விடுதலை செய்யுமாறு, முஸ்லிம் மத அலுவல்கள், தபால் அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று  (25) ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து இந்தக்கோரிக்கையை விடுத்தாரென, அமைச்சரின் குரல் பதிவுடன் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் குறித்து அமைச்சர் ஹலீமிடம் நாம் வினவியபோது “ தான் அவ்வாறு விடுதலை செய்யுமாறு எவ்விதக் கோரிக்கையும் விடுவிக்கவில்லையென மறுத்ததுடன், விசாரணையை துரிதப்படுத்துமாறே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும்“ அமைச்சர் எமது தமிழ் மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .