Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 14 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணிலை பிரதமராக நியமித்து உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் எந்த விதத்திலும் நாம் பங்குதாரர் ஆகமாட்டோம் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அமைச்சுப் பொறுப்புகளையோ அல்லது வேறு பொறுப்புகளையோ எடுக்க தயாரில்லை எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நேற்று (13) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தில் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளுமாறும், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரணிலை பிரதமராக்கி தற்போது உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் எந்த விதத்திலும் நாம் பங்குதாரர் ஆகமாட்டோம் என்ற தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ளது. ஆகவே அமைச்சுப்பொறுப்புக்களையோ அல்லது வேறு பொறுப்புக்களையோ எடுக்க நாம் தயாரில்லை. நாம் சர்வகட்சி அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றோம். எமது கோரிக்கையாகவும் அதனையே முன்வைத்திருந்தோம்.
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணவேண்டும். மக்கள் பட்டினியில் உள்ளனர், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பாராளுமன்றத்தில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். மக்களுக்காக சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய பொறுப்பு சகல கட்சிகளுக்கும் உள்ளது. எனவே, அடுத்த பாராளுமன்ற கூட்டத்துக்கு முன்னர் சகல தரப்புடனும் பேசி இது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ராஜபக் ஷர்களை பலப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை, மாறாக மக்களின் பக்கமே எப்போதும் நிற்போம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
46 minute ago
51 minute ago