Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மாற்றமொன்று ஏற்பட வேண்டிய நேரம் வந்துள்ளதென்றும், அதன் பிரதிபலிப்புகளை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த சங்கரி, அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 1970ஆம் ஆண்டுமுதல், தான் மஹிந்தவின் நண்பர் என்றும் அந்தவகையில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவே கொழும்பு வந்ததாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மாற்றமொன்று அவசியமென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, புதிய ஆட்சியாளர்கள் அதனை நிறைவேற்றுவார்களென நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago