2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மஹிந்தானந்தவுக்குப் பிணை

Simrith   / 2025 மே 26 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டு சீன நிறுவனம் ஒன்றிலிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டது. 

சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுவித்தது. 

மே 16 அன்று, லஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில், தலைமை நீதவான் தனுஜா லக்மாலி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, மே 20 அன்று, மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தரப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டில் தரமற்ற உரங்களை ஏற்றிச் சென்ற கப்பலின் நுழைவை எளிதாக்குவதில் முன்னாள் அமைச்சர் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .