2025 ஜூன் 09, திங்கட்கிழமை

“மஹிந்த விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம்” அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 மே 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பல்வேறு கட்சிகள் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலகத் தயாராகி வருகின்றனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியாகி உள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2