2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாடியில் இருந்து பாய்ந்த நோயாளி பலி

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராபிட்டிய போதனா வைத்தியசாலை கட்டடம் ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்து நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளி ஒருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வெலிகம - தெனிபிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

இவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.            

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .