2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாரவில வென்னப்புவ பகுதிகளில் கைக்குண்டு, ரவைகள் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த, முஹம்மது முஸப்பிர்

மாரவில நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு பின்னால், காடு மண்டிக்கிடக்கும் இடத்திலிருந்து, துப்பாக்கி ரவைகள் சிலவற்றை, நேற்று (01) மாரவில பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

மாரவில அந்தோனியார் தேவாலயத்துக்குப் பின்னால் இருந்தே, ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திலிருந்து, எஸ.எல். ஆர் ரக ரவைகள் 02, 9 மில்லி மீற்றர் அளவிலான ரவைகள் 02, ரீ 56 ரக துப்பாக்கி ​ரவைகளையொத்த ரவைகள் 02 என்பவற்றையே, பொலிஸார் மீட்டுள்ளனர். 

இதேவேளை, வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெட்டியான லுணுவில பாலத்துக்கருகில், காட்டுப் பகுதியிலிருந்து, வெளிநாட்டுத் தயாரிப்பிலான கைக்குண்டொன்றை, நேற்று  (01) இரவு மீட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .