Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவனெல்ல பிரதேசத்தில், புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, அமைச்சரவைக்குத் தான் அறிவித்து, முற்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக, அமைச்சர் கபீர் ஹஸீம் தெரிவித்தார்.
அலரி மாளிகையில், தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிகுண்டு உற்பத்தியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்காகக் கைதுசெய்யப்பட்ட குழுவின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு, பொலிஸாருக்கு, கடுமையான அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் கூறினார்.
இதேவேளை, அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிரதான சந்தேகநபர், நேற்று (21) இடம்பெற்ற சம்பவங்களின் போது, தற்கொலைத் தாக்குதலை நடத்திக்கொண்டு உயிரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், தெரிவித்த அமைச்சர் ஹஸீம், இது தொடர்பில், ஓரிரு தினங்களுக்குள் தெளிவான விளக்கத்தை வழங்க முடியுமென்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago