Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென , மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படுமாயின், தான் தனது அமைச்சுப் பதவியை துறக்க தயாராகவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை- அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 17ஆம் நாடுபூராகவும் 8 மணித்தியால திடீர் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை குறித்து ஆராய்வதற்காக, அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் ஆலோசனைக்கமைய, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின் அறிக்கை நாளைய தினம் தன்னிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
1 hours ago