2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென , மின்தடை ​தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படுமாயின், தான் தனது அமைச்சுப் பதவியை துறக்க தயாராகவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை- அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 17ஆம் நாடுபூராகவும் 8 மணித்தியால திடீர் மின்தடை ஏற்பட்டது.

இந்த மின்தடை குறித்து ஆராய்வதற்காக, அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் ஆலோசனைக்கமைய, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின் அறிக்கை நாளைய தினம் தன்னிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .