Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 28 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, சாய்ந்தமருது நடுத்துறை கடற்கரையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காகப் படகு ஒன்றில் சென்ற மூன்று மீனவர்கள், மூன்று நாள்களாகயும் இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (26) அதிகாலை கடலுக்குச் சென்றதாகவும் மறுநாள் காலை திரும்ப வேண்டிய அவர்கள் இது வரையில் கரைசேரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.அமீர் அலி, எம்.அன்சார் மற்றும் எம்.எஸ்.நாஸர் ஆகிய மூன்று குடும்பஸ்தர்களே, இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களை தேடும் பணியில், மீனவர்கள் நேற்று (27) முதல் மேற்கொண்டிருந்த போதிலும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளதால் முதல்நாள் தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது.
மீண்டும் இன்று (28) தேடும் பணியில் நான்கு படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டு அவர்களின் உதவியையும் நாடியுள்ளதாக ஆள்கடல் மீனவர் சங்கத்தின் தலைவர் ஏ. ஹமீட் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago