2026 மே 06, புதன்கிழமை

மீன்வளத் துறையை மேம்படுத்த தென்கொரியா நிதியுதவி

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு மீன்பிடி துறையை அபிவிருத்தி செய்வதற்கான 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தமொன்று தென்கொரியாவுடன் இலங்கை இன்று (21) கைச்சாத்திட்டது.

அதன்படி, கல்பிட்டியவில் கடல் ஆராய்ச்சி மையத்தை நிர்மாணிக்க இந்த நிதி பயன்படுத்தப்படுவதுடன், இது இரு நாடுகளால் நிர்வகிக்கப்படும் என, மீன்வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆழ்கடலில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக தென்கொரியா ஒரு அதி நவீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .