2025 ஜூன் 25, புதன்கிழமை

‘முகத்தை முழுமையாக மூடி பாடசாலைக்கு வருவதற்குத் தடை’

Editorial   / 2019 மே 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை முழுமையாக மூடும் ​வகையிலான ஆடை மற்றும் தலை கவசம் அணிந்தல் சம்பந்தமான ஆலோசனைகள் உள்ளடக்கிய சுற்றறிக்கை, கல்வியமைச்சினால் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வியமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முகத்தை மூடுவது தொடர்பாக அவசரகால சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் என்னவென்பதனை அறியாமல் தலையை மறைத்து வந்த ஆசிரியர்கள் மற்றும் தனிநபர்கள் விடயத்தில் ஒரு சில பாடசாலைகளில் பெரும் சிக்கலான நிலைமை ஏற்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பாக அவதானம் செலுத்திய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய பணிப்புரையின் கீழ் இந்த சுற்றறிக்கை ​அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி முழுமையாக முகத்தை மூடும் ஆடை (புர்கா) தொடர்பாக அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைவாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு, முகத்தை மூடும் ஆடை தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள உருவப்படங்களுடன் கூடிய விசேட கடிதத்தை கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலை பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .