2025 ஜூன் 11, புதன்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் பலி

Freelancer   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்கனை - அனுராதபுரம், புத்தளம் பிரதான வீதியில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்றிரவு வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

நாயுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட வேளையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின் இருக்கையில் பயணித்த சிறுவனும் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தார்.

சாரதி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

சிலாபம் - வெலிஹேன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10