Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்டை உற்பத்தியாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பம் இடுவதற்கு முன்னதாக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முட்டை விலை 22 ரூபாயாக அதிகரித்த நிலையில் இரு தரப்பினருக்கு இடையில் இன்றைய தினம் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவிருந்தது.
பிரதமருடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைய பேக்கரி உரிமையாளர்களுக்கு 16 ரூபாய் 50 சதத்துக்கு முட்டையை பெற்றுக்கொடுக்க முட்டை உற்பத்தியாளர்கள் விரும்பம் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் முட்டையின் விலை 15 ரூபாய் வரை குறைவடைந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை அவசியம் என, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
1 hours ago