Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினை இம்முறை நடத்தாமல் இருக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை ஒன்றுகூட்டாமல் சமய வழிபாடுகளை பெல்லன்வில விகாரையில் எதிர்வரும் மாதம் 02ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து எந்தவித கடிதமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் அனுப்பப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், அவ்வாறான கௌரவ பதிவியொன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்க வேண்டும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago