2025 ஜூன் 25, புதன்கிழமை

‘முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்காமல் ரிஷாட் பதவி விலக ​வேண்டும்’

Editorial   / 2019 மே 26 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமைத் தொடர்பில் சிங்கள உறுப்பினர்கள், மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அமைச்சர் ரிஷாட் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியிலிருந்து முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுக்காமல், பதவி விலக வேண்டுமென, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

அக்கறைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் முஸ்லிம் மக்களுக்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் குரல் கொடுப்பதாலேயே அவருக்கு இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அமைச்சர் கபீர் ஹாசீம் உள்ளிட்ட மேலும் பல முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் போது, அவர்கள் ஏன் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .