Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், நாவற்குழி தெற்கு, கைதடியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29) என்பவராவார்.
மேற்படி இளைஞருக்கு கடந்த 29, 30, 31 ஆம் திகதி ஆகிய மூன்று நாள்கள் காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நெஞ்சுக் குத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சாவகச்சேரிப் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
31 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago