2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’மேற்குலகை நம்பி ஏமாற வேண்டாம்’

Editorial   / 2019 மே 10 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதங்களுக்கிடையே மோதல்கள் இடம்பெறுவதற்கு வழிசமைக்காது, அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென, அமரபுர நிக்காயவின் மஹாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று (10) நடத்தப்பட்ட சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மேற்குலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நம்பி ஏமாறாது, அனைத்தின மக்களும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென்றார்.

ஆயுத உற்பத்திகளில் ஈடுபடும் நபர்களுக்கு, யுத்தமொன்று ஏற்படுவது அவசியமென்றும் அவ்வாறான ஆயுத உற்பத்திகளில் ஈடுபடும் மேற்குலக நாடுகளால், யுத்தங்களின்றி வாழ முடியாதென்றும், பேராயர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .