2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மேலதிக வகுப்புகளை நடத்துமாறு பணிப்புரை

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் காரணமாக கைவிடப்பட்டிருந்த கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, மேலதிக வகுப்புகளை நடத்துமாறு, தென் மாகாண பாடசாலைகளுக்கு மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, அதற்கான சுற்றறிக்கையும் வௌியிடப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களின் தீர்மானத்துக்கு அமைய, பிற்பகல் 2.30 வரை குறித்த மேலதிக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாமென, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அது கட்டாயமானதல்ல என்று, தென் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .