Editorial / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 250 பேர், இன்று (24) நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோஹா கட்டாரில் இருந்து 21 பேரும், பஹ்ரேனில் இருந்து 180 பேர் மற்றும் இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து 49 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
25 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago