2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

“மொட்டுவின் தேசியப் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு அநீதி'

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணியமைத்த சில கட்சிகளுக்கு  பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசியப் பட்டியல் பெயரிடுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில், அமைச்சரவை நியமனத்தில் கூட்டணியின் ஏனைய கட்சிகளின் கருத்துகளை கருத்துகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணியை இவ்வாறான முறையில் நடத்திச்செல்வதாக இருந்தால் அது மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் என்றும் ரோஹண லக்ஷமன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .