2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் - ஓட்டோ சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரத்துக்குள் நாளை முதல் நுழையும் ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இடது பாதை அல்லது பஸ் முன்னுரிமை பாதையைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு நகரத்துக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று (14) முதல் பஸ் முன்னுரிமை பாதை முறை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை,  அதிகளவான ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வீதி விதிமுறைகளை கடைபிடிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .