2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மெல்பேனில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெல்பேனில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 9.30 மணியளவில், 48 வயதான இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

பாபர் ரைலிலுள்ள அவரது வீட்டிலேயே இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எதுவும் இருக்கவில்லை.

சம்பவத்தினத்தன்று, இவரது கணவன் பலமுறை குறித்த பெண்ணிடம் தொடர்புகொள்ள முயன்றபோதும், இயலாது போன பின்னர்  அவர் தனக்கு தெரிந்த ஒருவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

அங்கு போனவர்  வீடு திறந்திருந்ததையும் குறித்தப் பெண் கொலையுண்டிருப்பதையும் கண்டுள்ளார்.

வீட்டில் திருட்டு முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் வீட்டில் ஆயுதம் எதுவும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X