2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாசகம் பெற்ற 21 சிறுவர்கள் மீட்பு

Freelancer   / 2025 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாசகம் பெற்ற மற்றும் வீதியோரங்களில் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு தற்போது உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற முறையில் யாசகம் பெறுதல் மற்றும் பொருள்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறுவர்களைக் கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .