2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் மரணம்

Editorial   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த ரயிலுடனேயே மேற்படி நபர் மோதுண்டுள்ளார். இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X