2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யானைக் கூட்டம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தில் யானை கூட்டம் ஒன்று ஊருக்குள் பிரவேசிக்க முற்பட்டதையடுத்து,  வனவிலங்கு அதிகாரிகள் அக்கூட்டத்தை விரட்ட நடவடிக்கை  எடுத்துள்ளனர்.

திடிரென அம்பாறை மாவட்டம் வீரச்சோலை காட்டின் ஊடாக கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார் 40க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை(14) மாலை  இன்று(15) காலை  இச்சம்பவம் இடம்பெற்றதுடன் விரட்டி செல்லப்பட்ட யானைகள் மீண்டும் காடுகளுக்குள் சென்றுள்ளன.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வருகை தந்த வண்ணம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .