2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் திடீர் மரணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர் மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இதன்போது, வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .